Wednesday, November 26, 2008

நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி இவர்களுடன்


விருது நகர் மாவட்ட தமுஎச சார்பில் சாத்தூரில் 'நாவல் கருத்தரங்கம்' ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, நான் நால்வரும் உரையாற்றினோம். 'நானும் கதைகளும்' என்னும் தலைப்பில் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தைக் குரானில் வரும் மாந்த்ரீக யதார்த்த விஷயங்களு‌டன் இணைத்து ஒரு கட்டுரையாகவே எழுதி வாசித்தேன். விழா தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், கோணங்கி இவர்களுடன் நீண்ட நேரம் உரையாட சந்தர்ப்பம் வாய்த்தது. சாத்தூர் தோழர்கள் மணிமாறன், லட்சுமி காந்தன் இருவரும் நாங்கள் புறப்படும் போது சாத்தூர் நாட்டுப் பலகாரங்களைப் பொதிந்து தந்து வழியனுப்பி வைத்தனர். 2008-ல் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சாத்தூர் அனுபவம் நாட்டுப் பலகாரங்களின் சுவையைப் போலவே இனிமையாக இருந்தது.

No comments:

Post a Comment